சேர்ந்திடத்தான்
துடிக்கின்றேன்
எங்கோ ஒரு மூலையில்
தடுக்கின்றது என்
தன்மானம்
பலமுறை நான் உன்னை
அலட்சியப்படுத்தியது
போன்று
ஒருமுறையேனும்
நீ எனக்கு செய்திருந்தால்
அந்த வலி என்னவென்று
நானும் அறிந்துருப்பேனடா!
தினமொரு புதுக்கவிதை
படைக்கிறேன்
என்றேனும் ஓர்
நாள் இக்கவிதைகள்
உன்னை வந்தடையும்
என!
0 comments:
கருத்துரையிடுக