வியாழன், 27 செப்டம்பர், 2012

தினமொரு புதுப்பாடல் இசைக்கிறேன் உனக்காக

சேர்ந்திடத்தான் துடிக்கின்றேன்
எங்கோ ஒரு மூலையில்
தடுக்கின்றது என் தன்மானம்
பலமுறை நான் உன்னை
அலட்சியப்படுத்தியது போன்று
ஒருமுறையேனும் நீ எனக்கு செய்திருந்தால்
அந்த வலி என்னவென்று
நானும் அறிந்துருப்பேனடா!
தினமொரு புதுக்கவிதை படைக்கிறேன்
என்றேனும் ஓர் நாள் இக்கவிதைகள்
உன்னை வந்தடையும் என!

புதன், 26 செப்டம்பர், 2012

இது தான் நேசமா?

தினமொரு கருத்து வேற்றுமை நமக்குள்
தினமொரு மனத்தாபங்கள் எம் இருவருக்குள்
ஆனால் நொடிக்கொருமுறை
நம் உதட்டில் புன்னகை எனும்
இன்பத்தூரல் தூவாத நொடிப்பொழுதுகள் இல்லை
இதுவும் நேசமா? இது தான் நேசமா??

புதுக்கவிதை


வாழ்வில் நான் 
கண்ட துயர் என்னை
விட்டொழிந்தது.
புதுக்கவிதை 
படைக்கும் காலம்
நெருங்கி விட்டது.
துணை நின்ற 
கரங்கள்
தொலைதூரம்
 போயினும்
துயர் கொண்ட
 கதையை
 என் பேனா மைகள் 
இனியும் வடிக்காது.


திங்கள், 24 செப்டம்பர், 2012

காலமெல்லாம் காத்திருப்பேன்…



காத்திருந்த காலமெல்லாம்
கானலாகி போக
உன்னை நினைத்திருந்த
ஒவ்வொரு நொடிகளும்
என் விழிகள் கண்ணீர்
எனும் அருவியில் 
வழிந்தோடிய
இரவுகளும் விடியல்களும்
கண் இமைத்த கணமும்
உன் நினைவோடு போக
விழித்திருந்த வேளையிலும்
விழிகள் வலியில் மூடிருந்த வேளையிலும்
உறங்குகிறேன் உறங்குகிறேன்
என உற்றார் நினைத்த வேளைகளிலும்
உன்னை ஒரு நொடியேனும் மறக்காமல்
மனதில் மறைத்து வைத்திருந்த நிலையிலும்
உணர்ந்த வலி உனக்கு புரியவில்லைய?
அல்லது புரிந்தும் 
புரியாதது போன்று நடிக்கும்
உன் குழந்தை தனமான 
பேச்சில் நான் அறியவில்லையா!

ஆயிரம் அணைக்கட்டுக்கள் 
போட்டும் தடுக்கமுடியாத
என் உளக்குமுறல்களை
உன்னிடம் பகிர்ந்து கொள்வதரற்கெனவே
அன்று உனைத்தேடி வந்தேன்
ஆனால் உளக்குமுறல்களை
ஊமையாக்கிக் கொண்டு
உன்னருகில் உயிடர்த்தோழியாக நின்றேன்
என் உண்மைக்காதலை மறைத்து
உன் உயிர்க்காதலை வாழவைப்பதற்க்காக
என்றோ என்னிடத்தில்
நீ உன் காதலை சொன்னபோது
நான் மறுத்த்து
உன்னை நான் நேசிக்கவில்லை என்பதல்ல,
உன் நேசத்தை
நான் அன்று ஏற்றுயிருப்பபேனயின்
நான் என் தேசத்தை இழந்திருப்பேன்.
இன்று எனக்கு இழப்பதற்கு எதும் இல்லை
இருக்கும் உன்னை இழக்க முன்
உன்னிடத்தில் என் நேசத்தை
சொல்ல வந்தேன் இன்று
ஆனால் இன்றோ நீ
இன்னுமொரு இதயத்திற்கு சொந்தமான
என் இனியவன் என்று தெரிந்ததும்
என் இதயத்தோடு சேர்த்து
என் நேசத்தையும் பூட்டி விட்டேன்

என்றேனும் என் கவிதைகளுக்கு
கால்கள் முளைத்தால் வந்து சேரும்.
அன்று என் உண்மை நேசத்தையும்
நீ கண்டு கொள்வாய்
பூட்டிய இதயத்துடன்
என் நேசமும் திறக்கும்
என்றாவது ஓர் நாள்
நான் மறுத்த
உன் நேசத்தையும்
நான் மறைத்த என் நேசத்தையும்
நீ புரிந்து கொள்வாய்
என் ஜீவன் என்னை விட்டு பிரிந்திரிப்பினும் ..



உறங்க விடு


பூக்களின் மத்தியில் என் கரங்களில் கிடைத்த
     ஒளிச்சுடரே!

பூமி தன்னை கடல் தொடுகையில் இணைந்த  
    உறவே!

தொடு வானில் சுடு திங்கள் மறைந்துமுழுதியிற்கு வழிவிடும்நொடி என்னுள் எழுந்த
    கனவே!


உன் இன்னிசையில் உலகை உறங்கச்செய்யும் நீ
என்னை மட்டும் உன் வசையால் 
உறங்க விடமல் செய்வது ஏன்?


வெள்ளி, 21 செப்டம்பர், 2012

நான் கண்ட நேரம்.



பூ தளிர் விட்ட நேரம்..
சிப்பியில் முத்துக்குளித்த நேரம்..
விண்மீன்கள் விருட்ச்சித்த நேரம்..
வானில் வான்மதி தோன்றிய நேரம்..
என் வாழ்க்கையில் வரம் பெற்ற நேரம்
உன்னை கண்ட அந்த நேரம்!!