காலங்களில் சிறந்த காலம் உன்னுடன்
வாழ்ந்த பொற்காலம்.
காயங்களில் அதிகம் வலித்த
காயம் நீ தந்த பிரிவு எனும் காயம்.
காலங்கள் காற்றினில் கரைக்கப்பட்டன.
காயங்கள் கானலாக்கப்பட்டன.
காலங்களும் காயங்களும் மறக்கப்பட்டது
அவை நீ வந்து போன தடங்களை
அழிக்க முடிந்ததே தவிர
உன் நினைவை அல்ல.
இன்னும் உன் நினைவோடு நான்
வாழுகின்றேன்
என்பதற்கு ஒரே ஒரு சாட்சி
உன் வரவையும் பிரிவையும் நினைவையும்
என் பேனைமுனைகளின் மையினால்
என் கவிகள் உயிரோட்டமாகின்றதே!
நின்று நிமிர்ந்து நிற்க்கையில்
தடம் புரளச்செய்த உன் வரவு
தலைநிமிரச்செய்தது
ஆனால் அதே பிரிவு
மீண்டும் என்னை தலை குனியச்செய்த
போதே உணர்ந்தேன்
நான் தலை சாய்ந்து ஆறுதல்
பெறுவதற்கு
உன்னைப்போல் எவரும் என் அருகில்
இல்லை என..
0 comments:
கருத்துரையிடுக