உன் நினைவுடன்
அன்று விழிகளில்
விழுந்த உன்னை வெறுக்கவும் முடியமல் விலகவும் முடியமல் தவித்த வேளையில் என் விழிகளில்
விழுந்த கண்ணீரை துடைப்பதற்கு தகுதியயை உனக்கு தரவில்லை.
இன்று விழிகளை
விட்டு விலகி வெறுமையான் வாழ்க்கை வாழும் போது எண்ணத்தோன்றுகிறது அன்று உனக்கு என்
கண்ணீரைத் துடைக்கும் தகுதியயை தந்திருப்பேனாயின் காலம் முழுவதும் என் கண்ணீரை துடைத்திருப்பாய்
இன்னும் காலம் முழுவதும் என் கண்ணீருக்கு காரணமாகவும் நீயே அமைந்திருப்பாய்!
எப்போதும் புரியாத
புதிராய் முளைத்த உன் அன்பு அன் வாழ்க்கையில் நான் அனுபவித்த சோகங்களை மேலும் சுமைகளாக்கின.
காயங்களை ரணங்களாக்கின.. ஆனால் உன் இனம் புரியத அன்பு மாத்திரம் அனலாக அணைக்க தவறியதில்லை
என்பதையும் நான் மறுப்பதற்கு இல்லை..
அனலாக அணைத்த அன்பை
அணைத்து விட்டு ஆதரவான கரங்களை தேடிச்செனற்து உனக்கு துரோகமாக தெரிந்தாலும், ஆனல் நான்
துரோகி அல்ல இங்கிருந்த போதும் எங்கிருந்த போதும் உன் நினைவுடனே வாழுகின்றேன், அது
உனது அன்பை திரும்ப பெறுவதற்காக அல்ல உன் நினைவுடன் வாழும் வாழ்க்கையே என்றும் போதும்!
3 comments:
Superb maa:)
Nic..
Thanks ma
கருத்துரையிடுக