புதன், 11 ஜூலை, 2012

மறுப்பது ஏன்?


விடியலை எதிர் பார்கும் ஒவ்வொரு பூக்களுக்கும்,
புல் நுனியில் படரும் ஒவ்வொரு பனித்துளிக்கும்,
கடல்தனில் கரைசேரும் ஒவ்வொரு நுரைக்கும்,
மண்தனில் விழும் ஒவ்வொரு மழைத்துளிக்கும்,
வாழ்வு ஓர் நாளே!
அவை பூக்க மறுப்பதும் இல்லை.
படர மறுப்பதும் இல்லை.
சேர மறுப்பதும் இல்லை.
விழ மறுப்பதும் இல்லை.
மானிடராய் பிறந்த நாம் மட்டும் ஏன் மறுக்கின்றோம், மறக்கின்றோம்??




0 comments:

கருத்துரையிடுக