வியாழன், 15 நவம்பர், 2012

நீயே கடிதமாய்

எப்போதும்
நலவிசாரணையோடு
தொடங்குகிறது உனது உனது கடிதங்கள்
செயற்கையாய்
உன் வீடு, உறவினர்
சீதோஷண நிலை என
இடம் நிரப்பிக்கொள்கின்றன
சூழல்கள்

உனது சந்தோசம்,சிலிர்ப்பு
ஏக்கம், கனவு, காதல் என
எனக்கான உனது
நிகழ்கால விரிப்புகள்
எனது கையில்
இறந்தகாலப் பதிவுகளாய்

காலம் கடந்து நிற்கும்
பரிவர்த்தனைகள் எதுவும்
நமக்குள் நிகழ்ந்ததாய்
நினைக்கவில்லை எனக்கு

உனது முகமாய்,
சில சமயம் நீயாய்
இருக்கும்
எனக்கான உனது கடிதங்கள்
இனிமேலேனும்
இயல்பாய் இருக்கட்டும்
கசங்கிய காகிததில்
அழகாய் தெரியும் உன்னைப்போல்
அழகாய்த் தோன்றும்
தூங்கும் குழட்ந்தைப்போல்..!!

0 comments:

கருத்துரையிடுக